Guys, while reading some article, i found the following story. It really meaningful and make me think for a second.
As a human, we always think that God is not with us when we are in trouble... but He never let this "child" alone. Again,
Geetha Saram comes to my mind....
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
The story as below, its in Tamil words
ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன், ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டதோடு, கடும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.
இறைவன் காட்சி கொடுத்தார். அதோடு நில்லாமல் உன் பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டுமென்றாலும் கேள் என்றார்.
"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும். அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு என்று இறைவன் சொன்னார்.
பக்தர் விடவில்லை, "ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணையாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து கொள்வது?" என்றார்
ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.
"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப் பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன் உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள் உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!"
என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.
பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார் வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன் மகிழ்வாக வாழ்ந்தார்.
ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!
ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல் பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்? மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால் தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்
காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களையெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத் தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக் கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.
"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம், அப்போழுதே ஆண்டவரிடம் துன்பமில்லாத வாழ்க்கையைக் கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன் ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம். சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர் நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக் கண்ணாலும் பார்த்தோம். இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும் வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும் ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"
இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப் பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில் கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார். என்ன சோதனை?
இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது. மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு! சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத் துவங்கினார். அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார். இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு கேட்டார்.
"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம் என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத் துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"
அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:
"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான். நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன். அதனால் உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள். ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான் இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத் தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் - தெரிந்து கொள்வாய் பக்தனே!"